|The WORD| *ராஜாவா? ராஜாதிராஜாவா?*
ராஜாவின் உத்தரவும் அவனுடைய கட்டளையும் போய்ச் சேர்ந்த ஒவ்வொரு நாட்டிலும் ஸ்தலத்திலுமுள்ள யூதருக்குள்ளே மகா துக்கமும், உபவாசமும், அழுகையும், புலம்பலும் உண்டாகி, அநேகர் இரட்டுடுத்திச் சாம்பலில் கிடந்தார்கள். (எஸ்தர் 4:3 )
*ஆண்டவர் தமது ஜனங்களை எப்படியாவது காப்பாற்றுவது
நிச்சயம் . அதற்காக அவர் எப்படியாவது திட்டம் தீட்டுவார். அதற்கு, யாரை வேண்டுமானாலும், உபயோகப்படுத்துவார்!*
யூதகுலத்தை எப்படியாவது அடியோடு அழித்து விட்டால்,
மேசியா இவ்வுலகிற்கு வரமுடியாது என்று, ஆமான் போன்ற நபர்கள் மூலம் யூத வம்சம் அனைத்தையும் அழிக்க முயற்சித்தான் சாத்தான்!
அது போலவே இரண்டாவது உலக மகா யுத்தத்தின் போது
ஹிட்லர் மற்றும் சிலர் மூலமாக சுமார் 60 லட்சம் யூதர்களை அழிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வகையில் ஹிட்லர் இரண்டாவது
ஆமான் போல! மற்றவர்களை அழிக்க நாம் நினைத்தால் நாம் அழிந்து போவோம் என்பது நியதி! ஆமான் தான் வெட்டிய குழியில் தானே விழுந்தான்!
*ஒரு கோடி ஆமான்கள் வந்தாலும், ஒரே ஒரு எஸ்தரை கர்த்தர் முன்னமே ஆயத்தம் செய்திருப்பார்!* ராஜாவின் முத்திரை வைக்கப்பட்டாலும், ராஜாதி ராஜாவின் முத்திரையாகிய எஸ்தர், மூலமாக முடிவு மாறினது அல்லவா?
அரசனைத் தவிர யாரையும் வணங்கக் கூடாதென ராஜாவின் முத்திரை வைக்கப்பட்டது என அறிந்தும் பரலோக ராஜாவை நோக்கி, முழங்கால்படியிட்ட தானியேலுக்குத் தெரியும் அல்லவா "எந்த ராஜா பெரியவர்" என்று! *முத்திரை வைத்த ராஜாவுக்கு நித்திரை போயிற்றே!* முத்திரைக்குக் காரணகர்த்தாக்கள் சிங்கங்களுக்கு இரையானார்களே!
உலக ராஜாக்களின் முத்திரைகளைக் காட்டிலும், ராஜாதிராஜாவின் முத்திரையானது நம் முழங்கால்கள் வழியாக இன்றும் செயல்படும் அல்லவா? *நாம் உலக அரசாங்கங்களுக்கோ, அதிகாரங்களுக்கோ பயப்பட அல்ல, பரலோகத்தின் ராஜாதிராஜாவுக்கு பயன்படவே இருக்கிறோம்!*
*தடைகள் வரும்போது, தேவதூதர் படைகளும் அனுப்பப்படுமே!* ஆமென்!
_______________
King or King of Kings?
Esther:4:3 – “And in every province where the king’s command and decree arrived, there was great mourning among the Jews, with fasting, weeping, and wailing; and many lay in sackcloth and ashes.”
It is certain that God shall somehow defend His people. To do so, he shall somehow design plans! And he uses anyone for this cause!
Knowing that 'if somehow the Jewish community is ruined, the Messiah would not be able to come to this world', Satan tried to destroy the entire Jewish dynasty through persons like Haman!
It is to be noted that during World War II, some 60 lakh Jews were killed by Hitler and some others. In this aspect, Hitler was like the Second Haman! It is factual that we shall be destroyed if we try destroying others! Haman fell into the same pit that he dug!
Even if one million Haman arrived, the Lord would have prepared a single Esther!Despite the Royal Seal was put, the end was changed through Esther (She was the Seal created by the King of Kings)!
Even after knowing about the Royal Seal that says "except the King, one shouldn't worship anyone", Daniel kneeled before the Heavenly God. He knows whose king is great. Is it not? The King who put the Seal lost his sleep! Those who were the reason for the Seal became the prey for the Lion's!
More than the Seals of the Wordly Kings, the Seal of the King of Kings shall operate through our knees even today. We are not there to fear about the government or the authorities of the world but to be used by the King of Kings!
If there are obstacles, there comes the Army of Angels too! Amen!
_____________________________
No comments:
Post a Comment