Blogger created for serving to god through Whatsapp. Gods child's can copy and share blog messages through Whatsapp. Praise the Lord. Amen Amen Amen....!!!

24 Feb 2017

_*இயேசு கிறிஸ்துவின் வருகையில் நம்பிக்கை யாயிருக்கிறீர்களா?*_

_*இயேசு கிறிஸ்துவின் வருகையில் நம்பிக்கை யாயிருக்கிறீர்களா?*_

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு வரப்போகிறார் என்பதில் நீங்கள் நம்பிக்கையோடு உறுதியாயிருக்கிறீர்களா? அவர் இந்த பூமிக்கு நியாயம் தீர்க்கப்போகிறார் என்பதில் உறுதியாயிருக்கிறீர்களா? 
அப்படியானால் நீங்கள் கீழ்க்கண்ட குணங்களை உடைய் வாழ்க்கையை வாழ வேண்டும்.

1. அன்பு நிறைந்தவர்களாய் வாழ வேண்டும். 

தன் சகோதரனிடத்தில் அன்புகூருகிறவன் ஒளியிலே நிலைகொண்டிருக்கிறான். அவனிடத்தில் இடறல் ஒன்றுமில்லை. 
(1 யோவான் 2 :10)

2. ஆவியில்  எளிமையுள்ளவர்களாய் இருக்க வேண்டும். (மத்தேயு 5: 3)

பணம் படைத்தவராய் இருக்கலாம் ஆனாலும் ஆவியில் எளிமை வேண்டும்.  லோத்தின் மனைவிக்கு உள்ளத்திலே பொருளாசை இருந்தது. அப்படியிருக்கக்கூடாது. 
ஆத்துமா வாழ்கிறதுபோல் நீ எல்லாவற்றிலும் வாழ்ந்தாலும் ஆவியில் எளிமை வேண்டும். 

3. பாவத்தை பார்த்து துயரப்படுபவர்களாக இருக்க வேண்டும். ( மத்தேயு 5: 

லோத்து ஆத்துமாக்களுக்கு கண்ணீர் விட்டார். 

4. சாந்த குணமுள்ளவராயிருக்க வேண்டும்.  (மத்தேயு 5: 5)

இது ஆட்டுக்குட்டியானவரின் சுபாவம். மயிர் கத்தரிக்கிற ஆட்டுக்குட்டிபோல் வாயைத்திறவாதிருந்தார். (ஏசா 53: 4-5)

5: நீதியிமேல் பசி தாகம் உள்ளவர்களாய் இருக்க வேண்டும். 
(மத்தேயு 5: 6)

6. இரக்கமுள்ளவர்களாய் இரக்கம் காட்ட வேண்டும். (மத்தேயு 5: 4)

பிறருடைய பாவங்களை மன்னிக்க வேண்டும். 

7. பரிசுத்தம் உள்ளவர்களாய் வாழ வேண்டும்.  (மத்தேயு 5: 8)

8. சமாதானமாக இருக்க வேண்டும்.  
     (மத்தேயு 5: 9)

போட்டி பொறாமையில்லாமல் பிறரோடு  இருக்க வேண்டும். 

9.கர்த்தருக்கு பயப்படுகிறவர்களாய் வாழ வேண்டும்.

உலகமே வெந்து அழியப்போகிறது, அதனால் தேவ பயத்தில் வாழ வேண்டும். 

10. ஆயத்தத்தோடு காத்திருக்கனும். 

வருவேன் என்றவர் வருவார்.  எந்த நேரமாயிருந்தாலும் ஆயத்தமான வாழ்க்கை வாழ வேண்டும். 

11. எஜமானின் வருகைக்கு வருவாரென்று ஆயத்தமாக இருக்க வேண்டும். இது முக்கியமாக  ஊழியக்காரருக்கு. 

இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன், ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான். 

(வெளிப்படுத்தின விசேஷம் 3 :20)

12. உங்களுடைய  அழைப்பை, பெற்ற வரங்களை உறுதியாய் காத்துக் கொள்ள வேண்டும்.

*எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று. ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம்பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள்.*
(1 பேதுரு 4 :7)
~SSS~

No comments:

Post a Comment