*இன்றைய தியானம் : 12:06:2018*
*கர்த்தர் இயேசுவின் இரண்டாம்(பகிரங்க) வருகையும் நியாயத்தீர்ப்பும் POST - 1*
*ஆசிரியர் முன்னுரை:-*
*"அவர் (இயேசு) வருகிறார், அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார், அவர் பூலோகத்தை நீதியோடும், ஜனங்களைச் சத்தியத்தோடும் நியாயந்தீர்ப்பார்." சங்கீதம் 96:13*
*"ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையம்படிக்கு நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும்." (2கொரிந்தியர் 5:10)*
*"இதோ, மேகங்களுடனே வருகிறார், கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக்காண்பார்கள், பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென்." வெளி 1:7.*
*கர்த்தருடைய வேதாகமம், தேவத்திட்டங்களை மனுக்குலத்திற்கு திட்டமும் தெளிவுமாக அறிவிக்கிறதாய் இருக்கிறது. அந்தந்தக்கால ஆவிக்குரிய வெளிச்சத்தின்படி வாழ்ந்து பூரண பரிசுத்தவான்களானவர்களை தேவன் தன்னோடு சேர்த்துக் கொண்டார். "ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருக்கையில், காணப்படாமற்போனான், தேவன் அவனை எடுத்துக்கொண்டார்." ஆதியாகமம் 5:24 "அவர்கள் பேசிக்கொண்டு நடந்துபோகையில், இதோ, அக்கினி ரதமும் அக்கினிக் குதிரைகளும் அவர்கள் நடுவாக வந்து இருவரையும் பிரித்தது, எலியா சுழல்காற்றிலே பரலோகத்திற்கு ஏறிப்போனான்." 2 இராஜாக்கள் 2:11.*
*அந்தந்த வேதாகம காலங்களில் வெளிப்பட்ட தேவனுடைய கட்டளைகள் கற்பனைகளைக் கைக்கொள்ளாதவர்களை தேவன் நியாயந்தீர்த்தார். "உன் சகோதரனுடைய இரத்தத்தை உன் கையிலே வாங்கிக்கொள்ளத் தன் வாயைத் திறந்த இந்தப் பூமியில் நீ சபிக்கப்பட்டிருப்பாய்." ஆதியாகமம் 4:11. "பணத்தை வாங்குகிறதற்கும், வஸ்திரங்களையும், ஒலிவத்தோப்புகளையும் திராட்சத்தோட்டங்களையும் ஆடுமாடுகளையும் வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் வாங்குகிறதற்கும் இது காலமா? ஆகையால் நாகமானின் குஷ்டரோகம் உன்னையும் உன் சந்ததியாரையும் என்றைக்கும் பிடித்திருக்கும் என்றான். " 2 இராஜாக்கள் 5:26,27. இவ்வசனங்களின் படி காயினும், கேயாசியும் நியாயந்தீர்க்கப் பட்டார்கள்.*
*கிருபையின் கால தேவ ஆவியானவரும் வாக்கு பண்ணியிருக்கிறார்."ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவஎக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார். அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம். 1தெசலோனிக்கேயர் 4:16,17.*
*"இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது." வெளி 22:12*
*தேவனுடைய பிள்ளைகளே, வேதாகம காலங்களாகிய மனசாட்சி, நியாயப்பிரமாணம், கிருபையின் காலம் ஆகிய எக்காலமானாலும் அந்தந்த காலங்களில் வாழ்ந்த பூரண பரிசுத்தவான்களை தன்னோடு சேர்த்துக்கொண்டும், பாவிகளை நியாயந்தீர்த்து தண்டிக்கிறதையும் காண்கிறோம். கிருபையின் காலம் முடியும் வேளையில் இக்கால பரிசுத்தவான்களை உலகம் அறியாத நிலையில் தேவ எக்காளத்தோடு இரகசியமாய் திருடனைப் போல ஆகாய மட்டும் வந்து தன்னோடு சேர்த்துக் கொள்ளப்போகிறார்.*
*ஆயிரவருட அரசாட்சி, அதன் பின்பு சாத்தானின் கொஞ்ச காங்கிரஸ் ஆட்சி, உறுதியான அர்மகெதோன் யுத்தத்தில் தேவாதி தேவனாகிய இயேசு பாவிகளை நிநாயத்தீர்ப்புச் செய்யும் நியாயாதிபதியாய் வந்து சாத்தான், பூமி, வானம், சமுத்திரம், மரணம், பாதாளம் யாவற்றையும் நியாயந்தீர்த்து, "பாவிகளை இரண்டாம் மரணமாகிய அக்கினிக்கடலிலே தள்ளிப்போட (வெளி.20:14) உலகத்தின் இறுதி இமைப்பொழுதில் வரப் போகிறார்.*
*ஆண்டவரின் இரண்டாம் வருகை யானது, மரித்த பாவிகளை நியாயந்தீர்க்கும் நியாயாதிபதியாகவே வரும் வருகையாக இருக்கப் போகிறது. ஏனென்றால் அந்திக்கிறிஸ்துவின் 7 ஆண்டு இறுதியில் நடந்த "இரகசிய வருகை" , பூமியில் வாழ்ந்த பூரண பரிசுத்தவான்கள் யாவரையும் மணவாட்டியாய் தன்னோடு சேர்த்துக் கொண்டு விட்டார். ஆகையால் பூமியில் வாழ்கிற யாவரும் பாவிகளே.*
*இந்தப் பாவிகளை நியாயந்தீர்க்க வரும் இயேசுவின் இரண்டாம் வருகையானது எத்தன்மை கொண்டதாக இருக்கும். பூமி,வானம்,சமுத்திரம், பாவிகள், மரணம், பாதாளம், யாவற்றின் நிலைகள் எப்படியிருக்கும். வெள்ளை சிங்காசன நியாயதீர்ப்பிற்காக எழுந்திருக்கும் 6,7,உயிர்த்தெழுதல்கள், பாவிகளுக்கு கிடைக்கும் வித்தியாசமான தண்டனைகள். அக்கினிக்கடல், நித்தியம் யாவற்றையும் தேவத்திட்டங்களை வேத வசன ஆதாரங்களோடு தேவ ஆவியானவரால் அறிவிக்கப்பட்ட புஸ்தகமே, "கர்த்தர் இயேசுவின் இரண்டாம்(பகிரங்கை) வருகையும் நியாயத்தீர்ப்பும்," என்ற இப்புத்தகம்.*
*ஆண்டவர் இயேசுவின் வருகைகளைக் குறித்து வேத பண்டிதர்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் நிலவும் இக்கடைசிக்காலத்தில் கர்த்தருடைய வருகைகளாகிய."இரகசிய வருகை" "கர்த்தர் இயேசுவின் இரண்டாம் (பகிரங்க) வருகையும் நியாயத்தீர்ப்பும்", என்ற இரண்டு வருகைகளே உண்டு என்பதைக் குறித்த தேவத்திட்டங்களை வேதவசனங்களைக் கொண்டு ஆவியானவரின் உதவியால் தெளிவாக எழுதப்பட்டுள்ளது. வேதப்பண்டிதர்களிடையே காணும் வேறுபட்ட கருத்துக்களுக்கு இப்புத்தகம் தெளிவான தீர்வாக அமையும் என்று அன்பர் இயேசு கிறிஸ்துவுக்குள் நம்புகிறேன். ஆவிக்குரிய தேவனுடைய பிள்ளைகள் இப்புத்தகத்தை வாசித்து கடைசிக்கால தேவத்திட்டங்களை அறிந்து மணவாளன் இயேசுவை சந்திக்க பூரண பரிசுத்தமடைந்த மணவாட்டிகளாய் ஆயத்தப்பட அன்பின் ஆண்டவர் இயேசு அழைக்கிறார். இயேசுவே வாரும்! ஆமென். அல்லேலூயா!*
*கிறிஸ்துவின் ஊழியப்பாதையிலே அப்போஸ்தலன் ,*
*I. ஆசீர்வாதம்*
*"பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை"*